கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை!

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள மிகுதியும், அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவற்றைச் செலுத்துவதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் கடற்றொழில் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.