புலம்பெயர் பிரபல தொழிலதிபரின் தாயார் காலமானார்!

புலம்பெயர் தமிழர்களது வெற்றியின் அடையாளம் என்று குறிப்பிடப்படுகின்ற லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின் தாயார் இன்று காலமானார்.

சனிக்கிழமை(28.04.2018) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய வியாபார வலையமைப்பை உருவாக்கி, மேற்குலக வியாபார நிறுவனங்கள் பலவற்றை பின்னுக்குத் தள்ளி, தொலைத்தொடர்பு வியாபார உலகில் மிகப்பெரிய சாதனை படைத்து ஈழத் தமிழருக்குப் பெருமை சேர்த்தவர் ரஞ்சித் லியோன் அவர்கள்.

தனது வெற்றியின் பின்னணியில் இருந்த பெண் என்று திரு.லியோன் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு நபர்தான் அவரது தாயாரான திருமதி ராஜேஸ்வரி (மலர்) இராசய்யா லியோன் அவர்கள்.
இளவயதில் தனது கணவனை இழந்த நிலையில், தனி ஒரு பெண்ணாக நின்று உழைத்து, ரஞ்சித் லியோனையும் அவரது சகோதர சகோதரியையும் கல்வியிலும், வியாபாரத்திலும் முன்னேற்றிய அந்த தாயார், இன்று பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த முனனுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.