16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டு எதிர்கட்சியுடன் இணைய தீர்மானம்!

எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். 

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (23) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். 

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.