தொடரூந்து 3ஆம் தர பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு!

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, தொடரூந்து சேவையின் 3ஆம் தர பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் . கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொடரூந்து நிலைய சமிக்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.ஜீ.வை.எஸ். ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளது.  தொடரூந்து நிலையை சமிக்ஞையாளர்கள், தொடரூந்து பயண அனுமதிப்பத்திர சேகரிப்பாளர்கள், பொருட்கள் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.