குவைட் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக குவைட் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு, கிரான்பாஸ் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று அதிகாலை 1.10 மணியளவில் குவைட்டில் இருந்து வந்த குவைட் விமான சேவைக்கு சொந்தமான கே.யூ 349 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபரிடம் இருந்த 30,000 சிகரட்கள் உள்ளடங்கிய 150 பொட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து வைத்திருந்த போது கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட்கள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சிகரட்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.