யாழில் ஈ.பி.டி.பியால் அமைத்து கொடுக்கப்பட்ட சட்டவிரோத வாடிகள் இடிப்பு!

யாழ்.தென்மராட்சி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு சங்குபிட்டி பகுதியல் சட்டத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருந்த வேறு பிரதேச மீனவர்களுடைய வாடிகள் சாவகச்சேரி பிரதேச சபையினால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

கோவிலாக்கண்டி மறவன்புலோ தனங்கிளப்பு கடல் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் நிறைய வாழ்ந்து வருகின்றது. இந்த குடும்பங்களில் வாழ்வாதாரத்தை பாதிக்கு ம் வகையில் ஈ.பி.டி.பி யினரால்
அதுவும் நேரடியாக டக்லஸ் தேவானந்தவின் நிதி உதவில் நாவந்துறை குருநகர் பகுதிகளை சேர்ந்த கடல் தொழிலாளர்கள்  நூற்றுக்கும்  அதிகான தொழிலாளிகளுக்கு  வாடி அமைத்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி விடயம் குறித்து சா வகச்சேரி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தமையினையடுத்து, மேற்படி வாடிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.