யாழில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டனப் போராட்டம்!

தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட
துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரசே ஆலை அவசியமானதோ - தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா?” உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தமை தெரிந்ததே. இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.