கதிரவெளியில் துப்பாக்கி மீட்பு!

கதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை
மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளை புதைக்க நிலத்தை தோண்டியபோது நிலத்திலிருந்து மர்ம பொதியொன்று இருப்பதை அவதானித்துள்ளார்.

அது வெடிபொருளாக இருக்கலாம் என சந்தேகம் கொண்ட அவர், இத் தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையகத்துக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் அப் பொதியை சோதனையிட்ட போதே மேற்படி ரி 56 ரக துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.