ஹம்பாந்தோட்டையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை!

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 எழுநூறு மில்லியன் டொலர்கள் இதற்கான வௌிநாட்டு நேரடி முதலீடாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இது இலங்கை ரூபா மதிப்பில் 10,850 கோடி ரூபாவாகும்.

 ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படும் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் மாதமொன்றுக்கு சுமார் 200 மெகாவோட் மின்னுற்பத்தியை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.