சட்டவிரோதமாக தங்கியிருந்த இரண்டு சீனப் பிரஜைகள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சீன நாட்டுப் பிரஜைகளான 48 வயதுடைய பெண் ஒருவரும் 72 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.