மைத்திரி சொன்ன பதில் ஆனந்த சுதாகரனை விடுவிக்க முடியாது!

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்ட மாநாடு நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.

இதன் போது, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆனந்த சுதாகரனின் மனைவி உயிரிழந்துள்ளமையினால் இரு பிள்ளைகளும் பெரும் கஷ்ட்டங்களை அனுபித்து வருவதனால் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதில் வழங்கிய ஜனாதிபதி, ஆனந்த சுதாகரனைப் போல் பலர் சிறையில் உள்ளனர். இவரை விடுவித்தால் அவர்களும் தம்மை விடுவிக்குமாறு கோருவார்கள். இதனால் உடனடியாக இதற்கு இடமளிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தப் பதிலுக்கு எதிர் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், ஆனந்த சுதாகரனை பிள்ளைகள் அடிக்கடி சென்று பார்க்கக்கூடிய வகையில் அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் விக்னேஸ்வரனின் இந்தக் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.