மாகாணத்துக்கான நிரலிலும் கொழும்பு அரசு தலையீடு!
அமைச்சுக்குத் தெரியாமல், கொழும்பு அரசு நேரடியாகத் திட்டங்களைத் தயாரித்துக் கூட்டுறவு அமைச்சின் பணியாளர்களைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்துகின்றது. கூட்டுறவுத் துறை
மாகாணத்துக்கு மாத்திரம் உரிய விடயம். அதிலும், கொழும்பு அரசு தலையீடு செய்கின்றது.
இவ்வாறு வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் குற்றஞ்சுமத்தினார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், 2018ஆம் ஆண்டு வரவு –- செலவுத் திட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில், அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்து வெளியிட்டார்.
தமது அமைச்சின் ஊடாகத் திட்டமுன்மொழிவு சமர்பிக்கப்படவில்லை. யாரோ ஒரு தனிநபரால் தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வரவு – – செலவுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா கூட்டுறவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீட்டுக்குரிய திட்டங்கள் எமது அமைச்சால் சமர்பிக்கப்பட்டிருக்கவில்லை. எமது அதிகாரிகளைப் பயன்படுத்தியே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். எமது அதிகாரங்களை, கொழும்பு அரசு பறிக்கின்றது. இதனைச் சுட்டிக்காட்டவே இந்த விடயத்தை இங்கு தெரியப்படுத்தினேன் – – என்றார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் கல்வி தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார். மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளரைக் கூட்டத் துக்கு அழைத்தார். இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.
மாகாணத்துக்கு தெரியாமலேயே அவர்கள் விடயங்களைக் கையாள்கின்றார்கள் – – என்றார்.
மாகாணத்துக்கு மாத்திரம் உரிய விடயம். அதிலும், கொழும்பு அரசு தலையீடு செய்கின்றது.
இவ்வாறு வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் குற்றஞ்சுமத்தினார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், 2018ஆம் ஆண்டு வரவு –- செலவுத் திட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில், அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்து வெளியிட்டார்.
தமது அமைச்சின் ஊடாகத் திட்டமுன்மொழிவு சமர்பிக்கப்படவில்லை. யாரோ ஒரு தனிநபரால் தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வரவு – – செலவுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா கூட்டுறவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீட்டுக்குரிய திட்டங்கள் எமது அமைச்சால் சமர்பிக்கப்பட்டிருக்கவில்லை. எமது அதிகாரிகளைப் பயன்படுத்தியே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். எமது அதிகாரங்களை, கொழும்பு அரசு பறிக்கின்றது. இதனைச் சுட்டிக்காட்டவே இந்த விடயத்தை இங்கு தெரியப்படுத்தினேன் – – என்றார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் கல்வி தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார். மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளரைக் கூட்டத் துக்கு அழைத்தார். இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.
மாகாணத்துக்கு தெரியாமலேயே அவர்கள் விடயங்களைக் கையாள்கின்றார்கள் – – என்றார்.
கருத்துகள் இல்லை