தரம் ஒன்றிற்கான விண்ணப்பப் படிவ காலம் நீடிப்பு!

தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம், குறித்த விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இம்மாதம் 30 ஆம் திகதி வரை தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்  என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.