கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சைட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!



சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடக் கோரி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதிப் பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று கோஷங்களை எழுப்பினர். கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.