வவுனியா சிறுவர் பூங்காவிற்குள் மது அருந்திவிட்டு அட்டகாசம்!

வவுனியாவில் மதுபோதையில் இளைஞர்கள் குழு சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்

சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு மது போதையில் பொல்லுகளுடன் சென்ற இளைஞர் குழு அட்டகாசம் புரிந்துள்ளதுடன், கடமையில் இருந்த ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடப் போவதாக தெரிவித்து உள்ளே நுழைந்து சிறுவர் பூங்காவில் வைத்து மது அருந்த முற்பட்டுள்ளனர். இந்நிலையில் பூங்காவில் மது அருந்த முடியாது எனக்கூறி அவர்களை வெளியேறுமாறு அங்கு கடமையில் இருந்த ஊழியர் தெரிவித்து அவர்களை வெளியேற்ற முற்பட்டார். இதன் போது மதுபோதையில் இருந்த குறித்த இளைஞர்கள் கடமையில் இருந்த ஊழியர் மீதும் மேலும் இருவர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பூந்தோட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர் குழுவே மது போதையில் இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளதாக தெரியவருகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.