வருகின்ற தேர்தலில் மைத்திரியை மீண்டும் துமிந்த சபதம்!
2020 ஆம் ஆண்டு நடைபெறும் அரச தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரியணையேறவேண்டும் என்பதே எமது இலக்காகும்.
’
இவ்வாறு தெரிவித்தார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் துமிந்த திஸாநாயக்க.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ள பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவும், தேசிய அமைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் நேற்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே துமிந்த திஸாநாயக்க இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்தாவது-,
உட்கட்சி மோதல் வலுத்ததால் இரண்டு, மூன்றாகப் பிரிந்து மோதிக்கொண்டு சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்றே சிலர் வழி மீது விழி வைத்துக் காத்திருந்தனர். ஆனால் சுதந்திரக் கட்சி அவ்வாறான கட்சியல்ல என்பதை நிரூபித்துள்ளோம்.
இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதும், 2020இல் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் வெற்றிவாகை சூடவைப்பதும், பொதுத் தேர்தலில் வெற்றிநடை போடுவதுமே எமது பிரதான நோக்கங்களாகும்.- -என்றார்.
கட்சியின் புதிய பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவும் கருத்து வெளியிட்டார்.
“மக்களின் இதயம் அறிந்த கட்சியே சுதந்திரக் கட்சி. குறுகில காலத்தில் கீழ்மட்டம்முதல் மேல்மட்டம்வரை மறுசீரமைப்பு இடம்பெறும். கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்று அவர் கூறினார்.
அதேவேளை, அரசிலிருந்து வெளியேறியுள்ள சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியிலுள்ள ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் நேற்று கட்சித் தலைமையகம் சென்று புதிய செயலாளரை வாழ்த்தியுள்ளனர்.
’
இவ்வாறு தெரிவித்தார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் துமிந்த திஸாநாயக்க.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ள பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவும், தேசிய அமைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் நேற்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே துமிந்த திஸாநாயக்க இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்தாவது-,
உட்கட்சி மோதல் வலுத்ததால் இரண்டு, மூன்றாகப் பிரிந்து மோதிக்கொண்டு சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்றே சிலர் வழி மீது விழி வைத்துக் காத்திருந்தனர். ஆனால் சுதந்திரக் கட்சி அவ்வாறான கட்சியல்ல என்பதை நிரூபித்துள்ளோம்.
இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதும், 2020இல் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் வெற்றிவாகை சூடவைப்பதும், பொதுத் தேர்தலில் வெற்றிநடை போடுவதுமே எமது பிரதான நோக்கங்களாகும்.- -என்றார்.
கட்சியின் புதிய பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவும் கருத்து வெளியிட்டார்.
“மக்களின் இதயம் அறிந்த கட்சியே சுதந்திரக் கட்சி. குறுகில காலத்தில் கீழ்மட்டம்முதல் மேல்மட்டம்வரை மறுசீரமைப்பு இடம்பெறும். கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்று அவர் கூறினார்.
அதேவேளை, அரசிலிருந்து வெளியேறியுள்ள சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியிலுள்ள ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் நேற்று கட்சித் தலைமையகம் சென்று புதிய செயலாளரை வாழ்த்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை