பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவிக்கு எதிராக நிதி மோசடி வழக்கு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


அந்த நாட்டு அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவி சாரா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜெரூசலம் மாவட்ட சட்டத்தரணி இன்று (21) அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததாக அந்த நாட்டு நீதியமைச்சு கூறியுள்ளது.

சுமார் 97,00 அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.