வன்னியில் தங்கம் வேட்டைக்குச் சென்றவர்கள் ஸ்கேனர் இயந்திரத்துடன் கைது!


இறுதி யுத்தத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுப்பதற்குச் சென்ற நான்கு பேர் ஸ்கேனர் இயந்திரத்துடன் கைதாகினர். வவுனியா, நேற்றுக் காலை நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
               பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் அடிப்படையில் திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
                  குறித்த ஸ்கேனர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
     

கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.