யாழில் அடையாள உண்ணாவிரதம்!

தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
U
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 7.30 மணியளவில் ஒன்றுகூடிய ஊழியர்கள் தமது அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட யாழ். அஞ்சல் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
6/2006 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தக் கோரி தபால் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடந்த 12ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு மேலும் வழு சேர்க்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்திலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.