வரலாறு படைத்தது ஒன்ராரியோ மாகான சபைத்தேர்தலில் நீதி வென்றது!

நீதியே வெல்லும் நியாயம் ஒன்று உண்டு .அநீதி செய்வோர் அழிந்து விடுவர்.
இயற்க்கை என்பது ஒரு போதும் பொய்ப்பதில்லை இந்த பிரபஞ்சங்கள்தான் உண்மை அதற்க்குள் இருக்கும் சக்தி மிக வலியது.
யாரையும் யாரும் ஏமாற்றலாம் ஆனால் ஒரு போதும் இயற்கையை வழிபடுபவனையும் இயற்க்கையின் சீற்றத்தையும் யாராலும் கட்டு படுத்தவோ , மட்டு படுத்தவோ முடியாது அது போன்றுதான் தற்ப்போது இடம் பெற்று முடிந்த ஒன்ராரியோ தேர்தல் முடிவும் என்பதை நிருபிக்கின்றது.

ஆயிரம் பழி சுமத்தியவர்கள் யார்?
விடிய விடிய வட்சப்பில் அவதூறாக எழுதியவர்கள் யார்? இது மட்டுமல்ல பிரதேச வாதம் பேசிய கட்டைகளும் குட்டைகளும் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் ..மக்களுக்கு எது தேவை என்பதை இயற்க்கை தீர்மாணித்துவிட்டது..
ஆயிரம் பழி சொற்க்கள், இழி சொற்க்கள் அத்தனையும் தாண்டியதுதான் எம் தமிழர்களின் ஒருமித்த வெற்றி இதற்க்கு காரணம் இயற்க்கை நியதி. 
மக்கள் தீர்மானம் அவர்கள் எல்லோரும் நிதானமாக எடுத்த முடிவு.. இனியாவது பேய்களும் ,பூதங்களும் தங்களது முடிவுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு வாழப்பாருங்கள் உங்களது வாழ்க்கையினை வீணாக்கி அலுப்பாயிசத்தில் போயிடாதீங்கோ.

இந்த வெற்றி தமிழர்களின் வரலாறு அதில் சாதித்த முதல் வெற்றியாளன் 
1, நம் இளம் கதாநாயகன் ரூஜ் பார்க் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தணிகாசலம் இவரை வாழ்த்துவதில் தளிரும் நாமும் பெருமையடைகின்றோம்.

2, சாதனைக்கே சாணக்கியனாய் விளங்கும் பன்னிரண்டு வருடங்கள் மார்க்கம் நகர சபை உறுப்பினராக இருந்து அனைவரையும் அன்புடன் கட்டி காத்த பெரும் தமிழ் தலை மகன் அரசியலில் முதல் நாயகன் அண்ணன் திரு .லோகன் கணபதி இன்று மார்க்கம் தோன்கில் தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கும் தளிர் சார்பாக எமது பாராட்டுதலும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சூழ்ச்சி செய்வோரே இனியாவது திருந்தப்பாருங்கள்.

என்றும் : வாழையூரான் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.