சத்­தத்தை அடக்­கு­வ­தற்கே எம்.பிக்­க­ளுக்­குப் பத­வி­கள் !

கூட்­ட­ர­சுக்­குள் எழுந்­துள்ள பிரச்­சி­னை­களை மூடி­ம­றைப்­ப­தற்­கா­கவே பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இரா­ஜாங்க, பிரதி அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்று மகிந்த அணி­யான பொது எதி­ரணி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.


ஐக்­கிய தேசி­யக் கட்சி தனி­யாட்சி அமைக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வந்த சில­ருக்­குப் பிரதி அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. சமா­ளிப்­புக்­காக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பிரதி அமைச்­சு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

கூட்­ட­ர­சின் செயற்­பா­டு­கள் மீது அதி­ருப்­தி­ய­டைந்து, எதிர்­கா­லத்­தில் தீர்க்­க­மா­ன­தொரு முடிவை எடுக்­க­வி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே அவர்­க­ளின் வாயை அடைத்து, திருப்­தி­ப­டுத்­து­வ­தற்­கா­கப் பத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­மூ­லம் அர­சுக்­குள் எழுந்­துள்ள பிரச்­சி­னை­கள் தீரும் என்று அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் எதிர்­பார்க்­கின்­ற­னர். இது தவ­றா­கும்.

எதிர்­கா­லத்­தில் புதுப்­புது பிரச்­சி­னை­கள் உரு­வா­கும். தலை­யி­டிக்­குத் தலை­ய­ணையை மாற்­று­வ­து­போல் – அமைச்­ச­ரவை மாற்­று­வ­தால் பிரச்­சினை தீராது. தேர்­த­லுக்­குச் செல்­வதே சிறப்­பான நட­வ­டிக்­கை­யாக அமை­யும் என்று மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.