எவருக்கும் அடிபணியாமல் உரத்துச் சொல்லும் தமிழ்த்தலைவர் விக்னேஸ்வரன்!

பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வீடுகள் புனரமைப்பதற்கான கட்டுமானப் பொருட்களை


அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத் திருப்பி அனுப்பியதைத் தவிர முதலமைச்சர் வேறு எதனையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள். உண்மையில், விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால், அரசுக்குச் சாமரம் வீசும் தமிழ்த்தலைவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் உட்காந்திருந்தால் நடைபெற்ற தமிழினப்படுகொலை உலக அரங்கில் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலி கலைச்சுடர் சனசமூகநிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நடைபெற்றது தமிழினப்படுகொலை என்பதை எவருக்கும் அடிபணியாமல் உரத்துச் சொல்லும் தமிழ்த்தலைவராக இன்று விக்னேஸ்வரன் அவர்களே இருப்பதால் அவர் மீண்டும் முதலமைச்சராக வருவதை அரசாங்கமும், அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடுபவர்களும் விரும்பவில்லை. அடுத்த முதலமைச்சர் தாங்கள் தான் என்று கனவு காண்பவர்களும் முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்வதை விரும்பவில்லை. இவர்களே வடக்கு முதலமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள். இந்தப் பின்னணியை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.