இந்­துக்­கள், முஸ்­லிம்­கள் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்த முயற்சி!

இந்­துக்­க­ளுக்­கும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்­றார். இந்து விவ­கார பிரதி அமைச்சை முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­ட­மை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­யம் எதிர்க்­கும். அதில் மாற்­றம் செய்­யா­வி­டின் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும்.


இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

இந்து சமய விவ­கார பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது,

இந்து சமய விவ­கா­ரத்­துக்கு பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நிய­மிக்­கப்­பட்­ட­மையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­ய­மாக எதிர்க்­கும். இந்து மதம் சார்ந்­த­வர்­க­ளுக்கு அந்த அமைச்­சுப் பத­வியை வழங்­கி­யி­ருக்­க­லாம். முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு இந்து சமய பிரதி அமைச்சு வழங்­கப்­பட்­டமை, இந்து மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளி­டையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றான முன்­னு­தா­ர­ணத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றார். பிரதி அமைச்­சுப் பதவி காதர் மஸ்­தா­னி­ட­மி­ருந்து மீளப்­பெ­றப்­ப­ட­வேண்­டும். அதைச் செய்­யா­வி­டின் நிச்­ச­யம் நெரு­டிக்­க­டியை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும் – என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.