பௌத்தர்களையும் களமிறக்கிப் போராடுவோம்!
இராணுவத்தினருக்கு எதிராக அரசு முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்குக் கிடைத்த பரிசு சிறைத்தண் டனை. இது குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க ஆகியோர் கவனத்தில் கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்கு முன்னால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகால் கந்த சுகத தேரர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.
பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை. அதேவேளை இன்று முதல் புதிய வகையில் எமக்கான நீதிக்காக போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த தேர்தலில் அரசு பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அது மாத்திரமல்ல எதிர்வரும் தேர்தலிலும் அரசு தோல்வியையே சந்திக்கும் என்பதில் மாற்றம் இவ்லை.
ஞனசாரதேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். இராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது – என்றார்.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்கு முன்னால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகால் கந்த சுகத தேரர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.
பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை. அதேவேளை இன்று முதல் புதிய வகையில் எமக்கான நீதிக்காக போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த தேர்தலில் அரசு பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அது மாத்திரமல்ல எதிர்வரும் தேர்தலிலும் அரசு தோல்வியையே சந்திக்கும் என்பதில் மாற்றம் இவ்லை.
ஞனசாரதேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். இராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது – என்றார்.
கருத்துகள் இல்லை