இராணுவம் தமிழர்களின் தூன்கள்?-இரா.சம்பந்தன்!

உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை சென்றுள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச்க்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவிற்குமிடையில் பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது நோர்வேயின் இராஜாங்க செயலாளரின் கேள்வியொன்றிக்கு பதிலளித்த இரா. சம்பந்தன் பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பதனையும் கூட்டிக்காட்டியுள்ளார். இந்த சந்திப்பில், நாட்டில் நிலவும் தற்கால அரசியல் நிலை குறித்து செயலாளருக்கு தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் விசேடமாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவது தொடர்பில் நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பிற்கு நன்றியையும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சந்திப்பின் பொது,
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தோல்வியுறும் பட்சத்தில் அது மேலும் மாக்களிடையே பிரிவினையை உருவாக்கும். 1956 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டின் அரசாங்க கட்டமைப்பில் மாற்றத்தினை வேண்டி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வந்தபோதும், இந்த ஜனநாயக கோரிக்கையானது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு தொடர்பிலான தமிழ் மக்களின் கோரிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அமைவாகவே இருக்கின்றன.

அரசியல் யாப்பு வரைபு யாப்பு பாராளுமன்றிக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெருன்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தினை பெறவேண்டும்.

துவேஷ சிந்தையுடன் செயற்படுவோர் இந்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இல்லை. எனினும் துரதிஷ்டவசமாக மென்போக்காளர்களை விட அவர்களின் கருத்துக்களே முதன்மை பெறுகின்றன.

மென்போக்காளர்கள் ஒன்று சேர்த்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசியல் அமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதினை உறுதி செய்யலாம்.
வடக்கு கிழக்கிலுள்ள காணி விடுவிப்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ளமையை கருத்திற்கொள்ளுகின்றபோது இந்த கருமங்கள் இன்னும் துரிதமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆயுத படையினர் கையகப்படுத்திய தமிழ் மக்களின் நிலங்களில் பயிர்ச்செய்கை செய்து, விளைச்சலை இந்த காணியின் உரிமையாளர்களுக்கே விற்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையே காணப்படுகிறது. இவை நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தினை நோக்கி செல்வதற்கு இப்படியான நடவடிக்கைகள் தடையாக அமைகிறது. என்ற விடயங்களையெல்லாம் எடுத்தியம்பிய சம்பந்தன், வடக்கு கிழக்கிலுள்ள பல பிரதேசங்களில் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பில் நோர்வே குழுவினருக்கு தெளிவுபடுத்தியதுடன், மக்களின் இந்த பிரச்சினைகளுக்கான சரியான தீர்வினை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் காத்திரமான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.