சூதாட்டத்திற்கு எதிரான இயக்கத்தில் களமிறங்கும் தாய்லந்து யானைகள்!

தாய்லந்து யானைகள் எதிர்வரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியில் களமிறங்கின. சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தில் யானைகள் அங்கம் வகிக்கவுள்ளன.


உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளுடன் ஒன்பது யானைகள் மாணவர்களோடு  காற்பந்து விளையாடின. ஆட்டம் 15 நிமிடம் நீடித்தது.குழுக்களின் மீது பந்தயம் கட்டுவதை விட விளையாட்டை ரசிப்பதே முக்கியம் என்பதை மாணவர்களிடையே உணர்த்த வேண்டும் என்று ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.