வவுனியாவில் மகளிற்கு தந்தை செய்த கொடூரம்!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று
சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த 11வயது பாடசாலை மாணவியை அவரது தந்தை நேற்று இரவு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டள்ளதாக இன்று ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாய் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தந்தையை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை இன்று பிற்பகல் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.