ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு
இதுதொடர்பாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தகவல் தருகையில் இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
முடிந்த வரையில் விரைவாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் தற்பொழுது ஓய்வூதியம் பெறும் அரச சேவையாளர்கள் இதற்காக மீள பதிவு செய்ய வேண்டியதில்லை.
அரச சேவையில் இருப்போர் மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விதவைகள் உள்ளிட்டோர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு இணையத்தள தரவு கட்டமைப்பு ஒன்றை அமைப்பதே இதன் நோக்கமாகும். இதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு ஆணையாளர் நாயகம் ஜகத் டயஸ் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை