விமல், பிரசன்ன இருவருக்கும்- நாடாளுமன்றத் தடை வரலாம்-!!
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோ
ருக்கு நாடாளுமன்றம் செல்லத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பில் கடந்தவாரம் நாடாளுமன்றில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவின் நடத்தை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப் பட்டது.
எதிர்வரும் 11ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
குறித்த இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டால், உரிய காலப்பகுதியில் நாடாளுமன்றத்துக்குச் செல்லத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகலா மகேஸ்வரனை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று விமல் வீரவன்ச கோஷம் எழுப்பியிருந்தார். இதன்போது, குண்டு வைத்து நாடாளுமன்றை அழிக்க வேண்டும் என்று நீங்கள் கூறிய கூற்றை மறந்து விட்டீர்களா? என்று சபாநாயகர், வீரவன்சவை எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகலாவைத் தண்டிக்க வேண்டும் என்று கூறுபவர்கள், விமலின் குண்டு வைத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்துக்கும் அவர் தண்டிக்கப்படவேண்டும் என்று தெற்கு அரசியலில் கருத்து முன்வைக் கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக் கது.
கருத்துகள் இல்லை