2020 இல் பொதுஜன பெரமுன வெற்றி பெறும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என்று இகொனமிஸ்ட்
இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட் நிறுவனம் (Economist Intelligence Unit (EIU)) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் அரசியலில் ஓரளவு செல்வாக்கு இருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான சக்தியை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்கும். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து பலவீனமான நிர்வாகம் காரணமாக தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் தடையேற்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என்றும், பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள், பொதுஜன பெரமுனவின் பிரபல்யம் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கின்ற பாரிய அரச எதிர்ப்பு மனநிலையும் பிரதிபலிக்கின்றதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் தேசிய கொள்கைகளை வகுப்பதில் திறனின்மை காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது சிரமமாக இருக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.