இலங்கைக்கு நிதி வழங்கப்படும் போது நிபந்தனைகள் விதிக்கப்படுவதில்லை – சீனா!

இலங்கைக்கு நிதி வழங்கப்படும் போது எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீன ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அந்நாட்டு வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜெங் சுவாங் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சீனா இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும்போது எந்த வித அரசியல் நிபந்தனைகளையும் விதிப்பதில்லை. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் பிராந்திய வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவும்.
சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் இரு நாடுகளிற்கும் மக்களுக்கும் பலன் அளித்துள்ளது.
சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்கவில்லை என சில நாட்களிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதையும் அவர் இதன்போது வரவேற்றுள்ளார்.

#srilanka  #cina  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.