நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.!

8 வருட போராட்டத்தின் பின்னர் புகலிடக் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக போராடி நியூசிலாந்தில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் பெற்றுள்ளது.

2010ஆம் ஆண்டு குறித்த குடும்பம் நியூசிலாந்தின் Queenstown பகுதியில் குடியேறியுள்ளது.

குடும்பத்தின் தலைவியான தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.

அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ் டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தமையினால் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இந்த குடும்பத்தை நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கு அந்த நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

அதற்கமைய அவர்களது முறையீடு வெற்றி பெற்றுள்ளதுடன், Let's Eat என திட்டத்தில் தினேஷாவுக்கு வேலை கிடைத்துள்ளது.

“தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. நியூசிலாந்தில் 450 பேர் தங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்கள் எங்கள் குடும்பம் குறித்து அக்கறை செலுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில் நாட்டு மக்களே தமக்கு உணவளித்தனர்.

என்னால் இவற்றினை மறந்து விட முடியாது. ஒரு வருட போராட்டத்தின் பின்னர் இறுதியாக குடிவரவு அமைச்சர் நியூசிலாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிவிட்டார்.

மக்கள் மற்றும் சட்டத்தரணி என அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மீண்டும் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்க்கை கிடைத்துவிட்டது. எனது கணவருக்கு சாரதி வேலை மீண்டும் கிடைத்து விட்டது” என தினேஷா உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.