மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ
கட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இருக்கவில்லை என்றும் ஆகவே மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமக்கு வேண்டாத ஒருவர் அதிகாரத்திற்கு வராமல் இருப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வாக்களித்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சியுடன் எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.