``இதுதான் 96' படத்தின் ஒரிஜினல் க்ளைமேக்ஸ்" - நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசியபோது,

``காதலிக்கிறதுக்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். பொதுவா ஆணுக்கோ பெண்ணுக்கோ ஆசைப்படுறது ஒரு இடம்; வாழ்க்கைப்படுறது வேற ஒரு இடமா இருக்கும். அது மாதிரி இந்த இளையராஜா சார் விழாவுல போட்டுக்கிறதுக்காக ஒரு மாசம் முன்னாடியே இந்தச் சட்டையை மியூசிக்கல் சிம்பள் எல்லாம் வெச்சு காதலோடு ரெடி பண்ணது. ஆனா, ஒரு சில காரணங்களால நான் அங்கே போகலை. அந்தச் சட்டையோடு இங்கே வந்திருக்கேன். 'யமுனை ஆற்றிலே' பாடலோட ஒரிஜினல் வெர்ஷனைவிட இந்தப் படத்துல அந்தப் பாட்டு எப்போ வரும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு இயக்குநருடைய காலை தொட்டு கும்பிடணும்னு நினைச்சேன். இந்தப் படத்துல இருக்கிற ஃப்ரேம் எல்லாமே பிரேம்தான் இருக்கார். எத்தனையோ நடிகர்கள் இருந்திருக்காங்க. மக்கள்கிட்ட பேசும்போது அப்படி ஒரு ஈர்ப்பு. அவங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ஒரு அமிர்தானந்தமயி என்ன பண்ணுவாங்களோ அது மாதிரி  ஆம்பளை அமிர்தானந்தமயியா இருக்கார், விஜய் சேதுபதி. தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்காங்க. அவருக்குப் பிறகு, பெண்கள் மத்தியில் அப்படியொரு ஈர்ப்பு இருக்கு. அதுதான் எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. ஆனா, இந்தப் படத்துக்கு த்ரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான்.


அவங்க நடிச்சிருக்க மாதிரியே தெரியலை. நான் முதன்முறையா த்ரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களா?னு கேட்டேன். மாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி எத்தனையோ ஹீரோயின்கள் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதுல தப்பிச்சவங்கதான் த்ரிஷாவும் நயன்தாராவும். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு" என்று விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார் பார்த்திபன். `காதலே காதலே' பாடலின் பிஜிஎம் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். ``இதுதான் படத்துடைய க்ளைமேக்ஸ்" என்றார் விஜய் சேதுபதி. சிறப்பு அழைப்பாளர்களாக திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.