மதுரோவின் எச்சரிக்கையை நிராகரித்தார் கெய்டோ!

நாட்டின் அரசியல் நெருக்கடிகள் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்ற ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் எச்சரிக்கையை, எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ நிராகரித்துள்ளார்.


கெய்டோவின் இடைக்கால ஜனாதிபதிக்கான அறிவிப்பை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தன.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் இந்த முட்டாள்தனமான செயற்பாடு உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என மதுரோ எச்சரித்தார்.

இந்நிலையில், மதுரோவின் இக்கருத்து அபத்தமானது எனத் தெரிவித்து கெய்டோ அவ் எச்சரிக்கையை நிராகரித்துள்ளார்.

அரைவாசிக்கும் அதிகமான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கெய்டோவிற்கான ஆதரவை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டன. இதனால், மதுரோவிற்கான அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ளன.

புதிய தேர்தலுக்கான காலக்கெடுவினை பிரித்தானிய, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் விதித்திருந்தன. ஆனால், அதனை மதுரோ நிராகரித்திருந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கெய்டோவிற்கான ஆதரவு வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.