வெனிசுலாவின் பொருளாதார அவலம்!!

வெனிசுவேலாவில், கடும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உணவு மற்றும் முக்கிய மருந்து பொருட்களை அனுப்பி வருகின்றன.

ஆனால் வெனிசுவேலாவில் உணவுத் தட்டுப்பாட்டை அடியோடு மறுக்கும் அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ வெனிசுவேலா மக்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், அவற்றை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதற்கேற்ப எல்லையில் வழியை மறிக்கும் விதமாக 3 லொறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே மிக மோசமான ஆட்சி நடத்தி வருவதாக மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

எவ்வாறாயினும், வெனிசுவேலா எல்லைப்பகுதியை அடைந்த அமெரிக்க உதவி அமைப்புகள் அங்குள்ள மக்களுக்கு உணவுகளை சமைத்து விநியோகித்து வருகின்றன.

குடாவை அடைந்துள்ள முதல் கட்ட உதவித் தொகைகளை நாட்டிற்குள் கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அதற்கான அனுமதி கிடைக்கும் வரை காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.