துறைமுகத்திலிருந்து கொள்கலன்களை வெளியேற்ற நடவடிக்கை!!

துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் விரைவில் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இதுவரையில் கொள்கலன்களை ஒரு நுழைவாயில் வழியாகவே வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு எதிராக மாற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இடமாற்றம் செய்யப்பட்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்க திணைக்களத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமையினால், துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.