பதவி விலகினார் அவுஸ்ரேலியாவுக்கான நேபாளத் தூதுவர்!!

அவுஸ்ரேலியாவுக்கான நேபாளத் தூதுவர் லக்கி ஷெர்பா மனிதக் கடத்தல் குற்றச்சாட்டையைடுத்து பதவி விலகியுள்ளார்.

தனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லையென மறுத்துள்ள அவர், நல்லெண்ண அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

லக்கி ஷெர்பா மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என இவரது சாரதியான வாங்சூ ஷெர்பா, கடந்த ஆண்டு டிசம்பரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக விளக்கமளிப்பதற்காக நாட்டிற்குத் திரும்பும்படி லக்கியை நேபாள அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், லக்கி ஷெர்பா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை நேபாள வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையுமில்லை. நல்லெண்ண அடிப்படையிலேயே நான் பதவி விலகியுள்ளேன். என்னை பதவி விலகும்படி யாரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.