மொழியுரிமை மீறல் தொடர்பாக குறைவான முறைப்பாடுகளே பதிவு! – சந்திரசேகரன்!!

மொழியுரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக மலையகத்திலிருந்து குறைவான அளவு முறைப்பாடுகளே கிடைப்பதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

மொழியுரிமை மீறப்பட்டுள்ளமை குறித்து அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் மொழியுரிமை மீறப்பட்டமை குறித்து தமது ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களை மட்டுமன்றி தனியார் நிறுவனங்களிலும் மொழியுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரச கரும மொழிகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எமது பணிகள் சிறப்பாக இடம்பெறுவதற்கும், அவை வெற்றி பெறுவதற்கும் மக்களது ஒத்துழைப்பு அவசியமானதாகும் என ஆணைக்குழுவின் தலைவர் சந்திரசேகரன் மேலும் குறிப்பிட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.