5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும்!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கசிப்பு வைத்திருந்த பெண் ஒருவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள திக்கோடை பிரதேசத்தில் புதன்கிழமை வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நேற்று (வியாழக்கிழமை) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே சந்தேகநபருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் தண்டப் பணமாகவும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.