திருட்டுக்களுடன் தொடர்புடைய சிறுவனுக்கு மறுவாழ்வு!!

திருட்டுக்களில் ஈடுபட்ட வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அச்சுவேலியிலுள்ள அரச சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்து மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல்  தீர்ப்பளித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

திருட்டுப் போன பொருள்கள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த சிறுவனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அவரை ஒரு வருடத்துக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதித்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது யாழ் மாவட்ட பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.