வடக்கு ஆளுநர் ஆசிபெற்றார் அஸ்கிரி மகாநாயக்கரிடம் !

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்துள்ள வடக்கு ஆளுநர் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.

அதனை தொடர்ந்து புனித தந்த தாதுவினை தரிசித்து வடக்கு ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்து ஆசி பெற்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.