வெளிவிவகார அமைச்சின் கவுன்சியூலர் அலுவலகம் மாத்தறையில் திறப்பு!

வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு கவுன்சியூலர் அலுவலகம் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்டத்தில் கவுன்சியூலர் அலுவலகங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இது அமுலாகிறது. கிராமப் பிரதேச மக்களுக்கு இதன் மூலம் கொழும்பு வர வேண்டிய தேவை ஏற்பட மாட்டாதென்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களின் நலன் கருதியும் கவுன்சியூலர் அலுவலகங்கள் பல்வேறு சேவைகளை முன்னெடுக்கின்றன. கவுன்சியூலர் அலுவலங்களை கிராம மட்டத்தில் விஸ்தரிக்க அமைச்சர் மங்கள சமரவீர எடுத்த நடவடிக்கையை அமைச்சர் மாரப்பன நன்றியுடன் நினைவுகூர்ந்தார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.