நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

கினிகத்தேனை புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தி நிலைய காரியாலயத்திற்கு முன்பாக பொல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 50ற்கும் மேற்பட்ட மக்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தியினால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களில் 4 குடும்பங்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தமக்கு நட்டஈடு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியதோடு, ஆக்ரோஷமாக கோசமிட்டவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தியினால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 50ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு வெட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையினால் அவர்களின் குடியிருப்புகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதற்கு முன்னரும் புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.