நல்லிணக்கப் பயணம் நிறைவு!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் இன்று வவுனியாவில் முடிவடைந்தது.
நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்லுறவையும், சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் இன்று வவுனியாவுடன் முடிவடைந்தது.
மாற்றுத்திறனாளியான முகமட் அலி என்பவர் கடந்த முதலாம் திகதி இந்தப் பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருச்து ஆரம்பித்திருந்தார். யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் கொழும்பு காலி மாத்தறை என நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று 15 நாள்களுடன் இன்று வவுனியாவில் முடித்துக் கொண்டார்.
தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் செல்லும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பயணமானது 1400 கிலோ மீற்றர் தூரம் சென்று வந்த நிலையிலையே முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நிதியில் மாற்றுத்திறனாளியான முகமட் அலிக்கு முச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.