வவுனியாவில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்!
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வைத்தே குறித்த இளைஞன்மீது நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றிருந்தார்.
அச்சமயம், அங்கு நின்ற இராணுவ வீரர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளதுடன், இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் பொலிஸாரால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வைத்தே குறித்த இளைஞன்மீது நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றிருந்தார்.
அச்சமயம், அங்கு நின்ற இராணுவ வீரர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளதுடன், இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் பொலிஸாரால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை