பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும்!

பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


கொழும்பு சேதவத்தையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.  ஆனால் இதனை மையப்படுத்தி பலர் தேவையற்ற பல விடயங்களை கூறிவருகின்றனர்.
அவர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து பல கதைகளை கூறி வருகின்றனர்.
அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதனை அறிந்தே பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
பௌத்தர்கள் மத்தியில் இனவாதத்தையும், குரோதத்தையும் பரப்பி அவர்கள் அதில் குளிர்காய்கின்றனர். குறிப்பாக சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டி விடுகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் பௌத்த மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க  முற்படுகின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.