கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி திரட்டும் ஓட்ட பயணம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி திரட்டும் ஓட்ட பயணம் முன்னெடுக்கப்பட்டது.

முகமாலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணம் கிளிநொச்சி நகருக்கு சென்றடைந்து நிறைவுக்கு வந்தது. இந்த பயணத்தில் ஹலோ ட்ரஸ்ற் (Hallo Trust) நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாட்டில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதில் ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.