காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் வலி தனக்குத் தெரி­யுமாம்- சந்திரிகா!

நானும் இரண்டு பிள்­ளை­க­ளைப் பெற்ற தாய்­தான். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் வலி –வேதனை எனக்­குத் தெரி­யும். அவர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க வேண்­டி­யது ஆட்­சி­யி­லுள்ள அர­சின் கடமை. இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா அம்­மை­யார் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இலங்­கை­யில் போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்­னர் பல தட­வை­கள் வடக்­குக்­குச் சென்­றுள்­ளேன். அந்த மக்­க­ளின் உள்­ளக் குமு­றல்­களை நேரில் பார்த்­துள்­ளேன்.
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்று பல இடங்­க­ளில், பொதுக் கூட்­டங்­க­ளி­லும் பேசி­யுள்­ளேன்;.
உற­வு­க­ளைத் தொலைத்­த­வர்­க­ளின் போராட்­டம் நீதி­யா­னது – நியா­ய­மா­னது. அதனை நாங்­கள் கொச்­சைப்­ப­டுத்த முடி­யாது.
நானும் இரண்டு பிள்­ளை­க­ளைப் பெற்ற தாய்­தான். பிள்­ளை­க­ளைத் தேடும் அந்­தத் தாய்­மா­ரின் வலி – வேதனை எனக்­கும் தெரி­யும். அவர்­க­ளு­டைய கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்­க­வேண்­டி­யது ஆட்­சி­யி­லுள்ள அர­சு­க­ளின் கடமை. இந்த விவ­கா­ரத்தை இழுத்­த­டிக்க முடி­யாது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் பணி­ய­கம் ஊடாக இந்­தப் பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யா­கத் தீர்­வைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.