தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழப்பு!!

ஜம்மு- காஷ்மீரில், மத்திய ஆயுத பொலிஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் உயிரிழந்த 44 வீரர்களுள் தமிழ்நாடு, தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி எனும் தமிழ் இராணுவ வீரர்கள் இருவர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரிலுள்ள, ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் மத்திய ஆயுத பொலிஸ் படையினர் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் மீது திடீரென பயங்கரவாதியொருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த தாக்குதலில் 44க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு பெரும்பாலானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.